என் மலர்
செய்திகள்

நாகை அருகே பஸ்சில் கொண்டு வரப்பட்ட ரூ. 3¼ லட்சம் பறிமுதல்
நாகை அருகே பஸ்சில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 3¼ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை சட்டமன்ற தொகுதியில் தேர்தல் விதிமுறைகளை கண்காணிக்கும் வகையில் 6 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தேர்தல் பறக்கும் படை தாசில்தார் ராஜசேகரன் தலைமையிலான பறக்கும் படையினர் நாகை அருகே உள்ள வாஞ்சூர் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
காரைக்காலில் இருந்து நாகை வழியாக முதுகுளத்தூர் சென்ற அரசு பஸ்சை மறித்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது பஸ்சில் பயணம் செய்த பயணி வைத்திருந்த பையில் ரூ. 3 லட்சத்து 26 ஆயிரத்து 207 இருந்தது தெரிய வந்தது. இதனை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் அந்த பணம் பஸ்சில் வந்த மதுரை மேலபென்னாகரம் பகுதியை சேர்ந்த ஆனந்த் கொண்டு வந்தது தெரிய வந்தது.
இவர் திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் விற்பனையாளராக உள்ளார். அந்த நிறுவனத்தின் சார்பில் விற்பனை செய்யப்பட்ட பல்வேறு கடைகளில் வசூல் செய்து கொண்டு வந்தது தெரிய வந்தது.
உரிய ஆவணத்தை செலுத்தி பணத்தை பெற்று செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். இந்த பணத்தை நாகை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
நாகை சட்டமன்ற தொகுதியில் தேர்தல் விதிமுறைகளை கண்காணிக்கும் வகையில் 6 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தேர்தல் பறக்கும் படை தாசில்தார் ராஜசேகரன் தலைமையிலான பறக்கும் படையினர் நாகை அருகே உள்ள வாஞ்சூர் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
காரைக்காலில் இருந்து நாகை வழியாக முதுகுளத்தூர் சென்ற அரசு பஸ்சை மறித்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது பஸ்சில் பயணம் செய்த பயணி வைத்திருந்த பையில் ரூ. 3 லட்சத்து 26 ஆயிரத்து 207 இருந்தது தெரிய வந்தது. இதனை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் அந்த பணம் பஸ்சில் வந்த மதுரை மேலபென்னாகரம் பகுதியை சேர்ந்த ஆனந்த் கொண்டு வந்தது தெரிய வந்தது.
இவர் திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் விற்பனையாளராக உள்ளார். அந்த நிறுவனத்தின் சார்பில் விற்பனை செய்யப்பட்ட பல்வேறு கடைகளில் வசூல் செய்து கொண்டு வந்தது தெரிய வந்தது.
உரிய ஆவணத்தை செலுத்தி பணத்தை பெற்று செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். இந்த பணத்தை நாகை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
Next Story






