என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

12-ம் வகுப்பு தேர்ச்சியில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்
- விருதுநகர் மாவட்டம் 97.27 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று 2-வது இடத்தை பிடித்தனர்.
- மதுரை மாவட்டத்தில் 96.89 சதவீத மாணவ-மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர்.
பெரம்பலூர்:
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியானது. மொத்தம் தேர்ச்சி சதவீதம் 93.76 சதவீதமாகும்.
பெரம்பலூர் மாவட்டம் 12-ம் வகுப்பு தேர்வில் முதல் இடத்தை பிடித்தது. அந்த மாவட்டத்தில் 97.95 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 97.53 ஆகவும், மாணவிகளின் தேர்ச்சி 98.39 ஆகவும் அந்த மாவட்டத்தில் இருந்தது.
அதற்கு அடுத்தபடியாக விருதுநகர் மாவட்டம் 97.27 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று 2-வது இடத்தை பிடித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் 3-வது இடத்தை பிடித்தது. அந்த மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் 97.02 ஆக இருந்தது. அதற்கு அடுத்தப்படியாக கோவை மாவட்டத்தில் 96.91 சதவீத மாணவ-மாணவிகளும், மதுரை மாவட்டத்தில் 96.89 சதவீத மாணவ-மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர்.
வேலூர் மாவட்டம் கடைசி இடத்தை பிடித்தது. அந்த மாவட்டத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் 86.69 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.






