search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    121-வது பிறந்தநாள்: காமராஜர் சிலைக்கு தலைவர்கள் மரியாதை
    X

    121-வது பிறந்தநாள்: காமராஜர் சிலைக்கு தலைவர்கள் மரியாதை

    • அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி காமராஜர் படத்துக்கு மாலை அணிவித்தார்.
    • த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கட்சி அலுவலகத்தில் காமராஜர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    சென்னை:

    பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்தநாளையொட்டி கிண்டியில் உள்ள அவரது நினைவிடம், தி.நகரில் உள்ள அவரது இல்லம், ஜிம்கானா கிளப் ஆகிய இடங்களில் உள்ள அவரது சிலைகளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

    சென்னை ஜிம்கானா கிளப் அருகில் உள்ள காமராஜர் சிலைக்கு தெலுங்கானா மற்றும் புதுவை கவர்னர் டாக்டர் தமிழிசை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கிரீன்வேஸ் ரோட்டில் உள்ள அவரது வீட்டில் காமராஜர் படத்துக்கு மாலை அணிவித்தார். முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் தலைமையில் ஜிம்கானா கிளப் அருகில் உள்ள காமராஜர் சிலைக்கு கட்சியினர் மரியாதை செலுத்தினார்கள்.

    இதில் அவை தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், வளர்மதி, கோகுலஇந்திரா, மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, விருகை வி.என்.ரவி, முன் னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை, டி.சிவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். அவருடன் துணைத்தலைவர் கரு.நாகராஜன், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், மாவட்ட தலைவர்கள் விஜய் ஆனந்த், காளிதாஸ், சாய்சத்யன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் காமராஜர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அமைந்தகரையில் காமராஜர் தொடங்கி வைத்த மாநகராட்சி பள்ளியில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எம்.எல்.ஏ. அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அதை தொடர்ந்து அங்கு படிக்கும் 300 மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கினார். இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரங்கபாஷ்யம், வசந்தராஜ், குலாம், சீனிவாசன், எம்.ஆர்.ஏழுமலை, ராகுல், கொளத்தூர் ரஞ்சன், மதிவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மத்திய சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவரும் மாநகராட்சி கவுன்சிலருமான சிவராஜ சேகரன் ஜாம்பஜாரில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் காமராஜர் படத்துக்கு மரியாதை செலுத்தினார்.

    காமராஜர் பிறந்தநாளையொட்டி பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    கல்வியிலும், தொழில் துறையிலும் தமிழ்நாடு இன்று தலைநிமிர்ந்து நிற்பதற்கான அடித்தளத்தை அறுபதாண்டுகளுக்கு முன்பே அமைத்துக் கொடுத்த பெருந்தலைவர் காமராஜருக்கு இன்று 121-ம் பிறந்தநாள். தமிழ் நாட்டை மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவையும் வழி நடத்தியதுடன், பிரதமர்களுக்கு எல்லாம் தலைவராக திகழ்ந்தவர் அந்த கர்ம வீரர். அவரது பிறந்தநாளில் அவரது நேர்மையையும், தேசப்பற்றையும் நினைவு கூர்ந்து போற்றுவோம்.

    தமிழ்நாட்டு முன்னேற்றத்தின் முகம் அவர் தான். எனது வளர்ச்சி அரசியலுக்கான முன்னோடியும் அவர் தான். அவரது வழியில் ஆட்சி நடத்தினால் அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக மாறுவதை தடுக்க முடியாது. இந்த உண்மையை உணர்ந்து தமிழகத்திற்கு பொற்கால ஆட்சி வழங்கிய அவரது வழியில் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் வழி நடத்தும் நிலையை உருவாக்க இந்த நாளில் உறுதியேற்போம்.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×