search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கள்ளச்சாராயம் குடித்து 12 பேர் பலி: தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தேடுதல் வேட்டை- டி.ஜி.பி அதிரடி உத்தரவு
    X

    கள்ளச்சாராயம் குடித்து 12 பேர் பலி: தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தேடுதல் வேட்டை- டி.ஜி.பி அதிரடி உத்தரவு

    • கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 22 கள்ளச்சாராய வியாபாரிகள் கைது.
    • கடலூரில் 226 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்து மாவட்ட காவல்துறை நடவடிக்கை.

    கள்ளச்சாராயம் குடித்து விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதன் எதிரொலியால், தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக, வனப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

    இதற்கிடையே, கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 22 கள்ளச்சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 88 கள்ளச் சாராய வியாபாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து 226 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை வழக்குகளில் 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 109 லிட்டர் சாராயம், 428 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    Next Story
    ×