search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது?- சி.பி.எஸ்.இ. நிர்வாகம் தகவல்
    X

    10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது?- சி.பி.எஸ்.இ. நிர்வாகம் தகவல்

    • எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு ஏப்ரல் 8-ந்தேதி பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற உள்ளது.
    • 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பிப்ரவரி 17-ந்தேதி முதல் ஏப்ரல் 10-ந்தேதி வரை நடக்க உள்ளது.

    சென்னை:

    மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு பொதுத் தேர்வு எப்போது தொடங்கும்? என்ற தகவலை கல்வியாண்டின் தொடக்கத்திலேயே, பள்ளிக்கல்வித் துறை சார்பில் வெளியிடப்படும் ஆண்டு நாட்காட்டியில் தெரிவிக்கப்பட்டுவிடும்.

    அந்தவகையில் பிளஸ்-2 மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு (2024) மார்ச் மாதம் 18-ந்தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு ஏப்ரல் 8-ந்தேதியும் பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற உள்ளது.

    இந்த நிலையில் சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு எப்போது? என்ற எதிர்பார்ப்பு அந்த தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் இருந்தது. அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், சி.பி.எஸ்.இ. நிர்வாகம் 10, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தொடங்கும் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

    அதன்படி, 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந்தேதி முதல் மார்ச் மாதம் 21-ந்தேதி வரையும், 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பிப்ரவரி 17-ந்தேதி முதல் ஏப்ரல் 10-ந்தேதி வரையும் நடக்க உள்ளது.

    Next Story
    ×