என் மலர்
விளையாட்டு

மலேசியா மாஸ்டர்ஸ்: 6 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஸ்ரீகாந்த்
- அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், ஜப்பானின் யூஷி தனாகாவுடன் மோதினார்.
- ஸ்ரீகாந்த் 21-18, 24-22 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
கோலாலம்பூர்:
மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், ஜப்பானின் யூஷி தனாகாவுடன் மோதினார்.
இந்த போட்டியில் ஸ்ரீகாந்த் 21-18, 24-22 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு BWF தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய பேட்மிண்டன் வீரர் என்ற சாதனையை கிடாம்பி ஸ்ரீகாந்த் படைத்துள்ளார்.
32 வயதான ஸ்ரீகாந்த், 2021 உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story






