search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பி.எஸ்.ஜி. கிளப்பை விட்டு வெளியேறுகிறார் மெஸ்சி
    X

    பி.எஸ்.ஜி. கிளப்பை விட்டு வெளியேறுகிறார் மெஸ்சி

    • கிளப் நிர்வாகத்தின் அனுமதியின்றி வெளிநாடு சென்றது சர்ச்சையானது.
    • 2 வாரத்துக்கும் அவருக்கு சம்பளம் வழங்கப்படாது என்று கூறப்படுகிறது.

    பாரீஸ்:

    அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி, பிரான்சை சேர்ந்த பாரீஸ் செயிண்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.) கிளப்புக்காக விளையாடி வருகிறார். அவர் அண்மையில் சவுதிஅரேபியா சுற்றுலா துறையுடன் செய்து கொண்ட ஒப்பந்தபடி அங்கு 2 நாள் பயணம் மேற்கொண்டார்.

    ஆனால் அவர் கிளப் நிர்வாகத்தின் அனுமதியின்றி வெளிநாடு சென்றது சர்ச்சையானது. இதையடுத்து ஒழுங்கீன நடவடிக்கையாக அவருக்கு லீக்1 போட்டியில் விளையாட 2 வாரங்கள் பி.எஸ்.ஜி. நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்த 2 வாரத்துக்கும் அவருக்கு சம்பளம் வழங்கப்படாது என்று கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்துள்ள மெஸ்சி, இந்த சீசனுடன் பி.எஸ்.ஜி. கிளப்பை விட்டு விலக முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Next Story
    ×