என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணி வெற்றியுடன் தொடங்குமா? தபாங் டெல்லியுடன் இன்று மோதல்
- தமிழ் தலைவாஸ் அணியில் அஜய்ங்கா பவார், சாஹர் உள்ளிட்ட முன்னிணி வீரர்கள் உள்ளனர்.
- இரவு 9 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் குஜராத் ஜெயடன்ஸ்-பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதுகின்றன.
அகமதாபாத்:
10-வது புரோ கபடி லீக் போட்டி அகமதாபாத்தில் நேற்று தொடங்கியது. இதில் 12 அணிகள் பங்கேற்றன.
நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின பரபரப்பான இந்த ஆட்டத்தில் குஜராத் 38-32 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.
யுமும்பா-உ.பி. யோதா அணிகள் மோதிய ஆட்டத்திலும் பரபரப்பு இருந்தது. இதில் மும்பை 34-31 என்ற புள்ளிகணக்கில் வெற்றி பெற்றது.
இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது. இரவு 8 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் சென்னையை தலைமை இடமாக கொண்ட தமிழ் தலைவாஸ்-தபாங் டெல்லி அணிகள் மோதுகின்றன.
தமிழ் தலைவாஸ் அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் தலைவாஸ் அணியில் அஜய்ங்கா பவார், சாஹர் உள்ளிட்ட முன்னிணி வீரர்கள் உள்ளனர்.
இரவு 9 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் குஜராத் ஜெயடன்ஸ்-பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதுகின்றன.
பெங்களூ அணியை வீழ்த்தி குஜராத் 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது. பெங்களூர் அணி எல்லா வகையிலும் சவால் கொடுத்து விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்