search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணி வெற்றியுடன் தொடங்குமா? தபாங் டெல்லியுடன் இன்று மோதல்
    X

    புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணி வெற்றியுடன் தொடங்குமா? தபாங் டெல்லியுடன் இன்று மோதல்

    • தமிழ் தலைவாஸ் அணியில் அஜய்ங்கா பவார், சாஹர் உள்ளிட்ட முன்னிணி வீரர்கள் உள்ளனர்.
    • இரவு 9 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் குஜராத் ஜெயடன்ஸ்-பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    அகமதாபாத்:

    10-வது புரோ கபடி லீக் போட்டி அகமதாபாத்தில் நேற்று தொடங்கியது. இதில் 12 அணிகள் பங்கேற்றன.

    நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின பரபரப்பான இந்த ஆட்டத்தில் குஜராத் 38-32 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.

    யுமும்பா-உ.பி. யோதா அணிகள் மோதிய ஆட்டத்திலும் பரபரப்பு இருந்தது. இதில் மும்பை 34-31 என்ற புள்ளிகணக்கில் வெற்றி பெற்றது.

    இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது. இரவு 8 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் சென்னையை தலைமை இடமாக கொண்ட தமிழ் தலைவாஸ்-தபாங் டெல்லி அணிகள் மோதுகின்றன.

    தமிழ் தலைவாஸ் அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் தலைவாஸ் அணியில் அஜய்ங்கா பவார், சாஹர் உள்ளிட்ட முன்னிணி வீரர்கள் உள்ளனர்.

    இரவு 9 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் குஜராத் ஜெயடன்ஸ்-பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    பெங்களூ அணியை வீழ்த்தி குஜராத் 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது. பெங்களூர் அணி எல்லா வகையிலும் சவால் கொடுத்து விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×