search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    புரோ கபடி லீக் போட்டி: புனே 2-வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி
    X

    புரோ கபடி லீக் போட்டி: புனே 2-வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி

    • புனே அணி 12 வெற்றி, 2 தோல்வி, 3 டையுடன், 71 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.
    • தமிழ் தலைவாஸ் 7 வெற்றி, 11 தோல்வியுடன் 40 புள்ளிகள் பெற்று 10-வது இடத்தில் உள்ளது.

    சென்னை:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது புரோ கபடி 'லீக்' போட்டி கடந்த டிசம்பர் மாதம் 2-ந்தேதி அகமதாபாத்தில் தொடங்கியது.

    அதை தொடர்ந்து பெங்களூரு, புனே, சென்னை, நொய்டா, மும்பை, ஜெய்ப்பூர், ஐதராபாத், பாட்னா ஆகிய இடங்களில் போட்டிகள் நடந்தது. 10-வது கட்ட போட்டிகள் தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது.

    புரோ கபடி 'லீக்' போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். 'லீக்' முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

    ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் முதல் அணியாக முன்னேறி உள்ளது. அந்த அணி 12 வெற்றி, 3 தோல்வி, 3 டையுடன் 72 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.

    புனேரி பல்தான் 2-வது அணியாக 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. நேற்று நடந்த ஆட்டத்தில் அந்த அணி 30-30 என்ற புள்ளிக் கணக்கில் டெல்லியுடன் டை செய்ததால் வாய்ப்பை பெற்றது.

    புனே அணி 12 வெற்றி, 2 தோல்வி, 3 டையுடன், 71 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. தெலுங்கு டைடன்ஸ் 2 வெற்றி, 16 தோல்வியுடன் ஏற்கனவே வாய்ப்பை இழந்து விட்டது.

    இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் 108-வது 'லீக்' ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-உ.பி. யோதா அணிகள் மோதுகின்றன.

    தமிழ் தலைவாஸ் 7 வெற்றி, 11 தோல்வியுடன் 40 புள்ளிகள் பெற்று 10-வது இடத்தில் உள்ளது. உ.பி. அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் 8-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது. உ.பி. யோதா 4 வெற்றி, 12 தோல்வி, 1 டையுடன் 28 புள்ளிகள் பெற்று 11-வது இடத்தில் இருக்கிறது.

    Next Story
    ×