என் மலர்
விளையாட்டு

Pro Kabaddi 2025: யு.மும்பையை 8 புள்ளிகள் வித்தியாசத்தில் விழ்த்தியது தெலுங்கு டைட்டன்ஸ்
- முதல் பாதி நேர ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் 27-11 என முன்னிலை பெற்றது.
- 2ஆவது பாதி நேர ஆட்டத்தில் யு.மும்பை 26-18 புள்ளிகள் பெற்றாலும் தோல்வியை சந்தித்தது.
புரோ கபடி லீக்கில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ்- யு.மும்பை அணிகள் மோதின. இதில் தெலுங்கு டைட்டன்ஸ் 45-37 என 8 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதல் பாதி நேர ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் 27-11 என முன்னிலை பெற்றது. 2ஆவது பாதி நேர ஆட்டத்தில் யு.மும்பை வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் 26-18 என 8 புள்ளிகள் முன்னிலை பெற்றனர். ஆனால் முதல்பாதி நேர ஆட்டத்தில் 16 புள்ளிகள் பின் தங்கியதால் 8 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தனர்.
தெலுங்கு டைட்டன்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் பரத் 13 புள்ளிகள் பெற்றார். அடுத்ததாக சேட்டன் சாகு 6 புள்ளிகள் பெற்றார்.
யு.மும்பை அணி சார்பில் அமிர் மொகமது, சந்தீப் ஆகியோர் தலா 7 புள்ளிகள் பெற்றனர். சதீஷ் கண்ணன் 6 புள்ளிகள் பெற்றார்.
Next Story






