என் மலர்
விளையாட்டு

புரோ கபடி லீக்: டெல்லியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பாட்னா
- புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
- இதில் பாட்னா பைரேட்ஸ் அணி வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
புனே:
11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்றது. புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்தது.
நேற்று நடந்த பிளே ஆப் ஆட்டங்களில் உ.பி.யோதாஸ், பாட்னா பைரேட்ஸ் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
இந்நிலையில், இன்று நடந்த 2வது அரையிறுதியில் தபாங் டெல்லி, பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் பாட்னா அணி 32-28 என்ற புள்ளிக்கணக்கில் டெல்லி அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
நாளை மறுதினம் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ், பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோத உள்ளன.
Next Story