search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்ஸ்டாவில் பதிவிட்ட அந்த மூன்று வார்த்தைகள்....
    X

    கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்ஸ்டாவில் பதிவிட்ட அந்த மூன்று வார்த்தைகள்....

    • உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியதால் வேதனையில் உள்ளார்
    • மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பில் இருந்து வேறு கிளப்பிற்கு செல்ல இருக்கிறார்

    கால்பந்து என்றாலே நமக்கு சற்றென்று நினைவுக்கு வரும் ஒரு வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ என்றால் அது மிகையாகாது. போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த இவர் கால்பந்தில் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். மான்செஸ்டர் யுனைடெட், ரியல் மாட்ரிட் அணிக்காக பல ஆண்டுகள் விளையாடி சாதனை புரிந்துள்ளார்.

    என்றாலும், போர்ச்சுக்கல் அணிக்காக உலகக் கோப்பையை இதுவரை வென்று கொடுத்தது கிடையாது. 37 வயதாகும் இவருக்கு கத்தாரில் நடைபெற்று வரும் 2022 உலகக் கோப்பைதான் கடைசி உலகக் கோப்பை. இதில் எப்படியாக சாதித்து விட வேண்டும் என்று நினைத்திருந்தார்.

    ஆனால், காலிறுதி ஆட்டத்தில் மொராக்கோவிடம் தோல்வியடைந்து போர்ச்சுக்கல் பரிதாபமாக வெளியேறியது. மைதானத்தில் இருந்து வீரர்கள் அறைக்கு செல்லும்போது அழுது கொண்டே சென்றார். மேலும் காலிறுதிக்கு முந்தைய மற்றும் காலிறுதி ஆட்டங்களில் மாற்று வீரராகவு களம் இறக்கப்பட்டார். இதுவும் அவருக்கு சோகத்தை ஏற்படுத்தியது.

    தற்போது தான் இருக்கும் நிலையை யதார்த்தத்தின் 3 அம்சங்கள் என மூன்று வார்த்தைகளில் விவரித்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் போஸ்டில், ''Pain (வலி), Uncertainty (உறுதியற்ற நிலை) And Constant work (தொடர்ந்து வேலை)'' எனப் பதிவிட்டுள்ளார்.

    ரசிகர்களுக்கு எளிதில் பொருள் புலப்படாத இந்த மூன்று வார்த்தைகளில் தனது தற்போதைய நிலையை ரொனால்டோ வெளிப்படுத்தியுள்ளதாக அறியப்பட்டுள்ளது.

    உலகக் கோப்பையில் இருந்து போர்ச்சுக்கல் வெளியேறியதை வலி என பதிவிட்டுள்ளதாகவும், மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து விலகிய நிலையில் மாற்று கிளப்பை இன்னும் தேர்வு செய்யாத நிலையை நிலையற்ற தன்னை என பதிவிட்டுள்ளதாகவும், என்னவாக இருந்தாலும் தொடர்ந்து தனது பணியை செய்ய வேண்டும். அதன் மூலம் தன்னை மேம்படுத்தி சிறந்த கிளப்பிற்கு செல்ல வேண்டும் என்பதை தொடர்ந்து வேலை என பதிவிட்டுள்ளதாகவும் அர்த்தம் கொள்ளப்படுகிறது.

    Next Story
    ×