search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி - தங்கம் வென்றார் இளவேனில் வாலறிவன்
    X

    உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி - தங்கம் வென்றார் இளவேனில் வாலறிவன்

    • உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி பிரேசிலில் நடைபெற்றது.
    • இதில் தமிழ்நாட்டு வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றார்.

    பிரசிலியா:

    உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் பிரேசிலின் ரியோடி ஜெனிரோவில் நடைபெற்று வருகிறது.

    இதில் பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய அணி சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் பங்கேற்றார்

    நேற்று நடந்த இறுதிப்போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இளவேனில் வாலறிவன் தங்கப்பதக்கம் வென்றார். அவர் 252.2 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார்.

    பிரேசிலில் நடைபெறும் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய அணி பெறும் முதல் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×