என் மலர்
விளையாட்டு

ஆக்கி இந்தியா லீக்: இறுதிப் போட்டிக்குள் நுழைந்த கலிங்கா லான்செர்ஸ்
- லான்செர்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு நேரடி தகுதி பெற்றது.
- ஐதராபாத் டூபான்ஸ் 2-0 என்ற கோல் கணக்கில் எச்.ஐ.எல். அணியை வீழ்த்தி வெளியேற்றியது.
7-வது ஆக்கி இந்தியா லீக் போட்டியின் பிளே ஆப் சுற்று நேற்று தொடங்கியது. குவாலிபயர்-1 ஆட்டத்தில் கலிங்கா லான்செர்ஸ்-ராஞ்சி ராயல்ஸ் அணிகள் மோதின.
இதில் லான்செர்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு நேரடி தகுதி பெற்றது.
லான்செர்ஸ் அணியில் அலெக்சாண்டர் ஹென்டிரிக்ஸ் 2 கோல் (12 மற்றும் 32-வது நிமிடம்) அடித்தார். ராயல்ஸ் தரப்பில் மன்தீப் சிங் கோலை (40வது நிமிடம்) பதிவு செய்தார்.
முன்னதாக நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் ஐதராபாத் டூபான்ஸ் 2-0 என்ற கோல் கணக்கில் எச்.ஐ.எல். அணியை வீழ்த்தி வெளியேற்றியது.
இன்று ஓய்வு நாளாகும். நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் குவாலிபயர்-2 ஆட்டத்தில் ராஞ்சி ராயல்ஸ்-ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு 2-வது அணியாக முன்னேறும்.
Next Story






