என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டிஎன்பிஎல் 2025: திண்டுக்கல் டிராகன்ஸ்க்கு 151 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது மதுரை பாந்தர்ஸ்
    X

    டிஎன்பிஎல் 2025: திண்டுக்கல் டிராகன்ஸ்க்கு 151 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது மதுரை பாந்தர்ஸ்

    • பவர்பிளேயில் 55 ரன்கள் குவித்தது.
    • ஆதீக் உர் ரஹ்மான் அரைசதம் விளாசினார்.

    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 11ஆவது போட்டி சேலத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சியாசெம் மதுரை பாந்தர்ஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

    டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி மதுரை பாந்தர்ஸ் அணியின் ராம் அரவிந்த், பாலச்சந்தர் அனிருத் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அரவிந்த் 11 பந்தில் 8 ரன்களும், அனிருத் 24 பந்தில் 31 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இதனால் பவர்பிளேயில் மதுரை 1 விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் அடித்திருந்தது. அடுத்து வந்த கேப்டன் சதுர்வேத் 22 பந்தில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    4ஆவது வீரராக களம் இறங்கிய ஆதீக் உர் ரஹ்மான் ஒரு பக்கம் நிற்க, மறுபக்கம் அடுத்தடுத்து விக்கெட் விழத் தொடங்கியது. இதனால் மதுரை அணியின் ரன் குவிப்பில் தொய்வு ஏற்பட்டது.

    கணேஷ் (0), சரத் குமார் (3), முருகன் அஸ்வின் (7) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 18 ஓவர் முடிவில் மதுரை 6 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்திருந்தது.

    19 ஓவரில் 8 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரின் 2ஆவது பந்தை சிக்சருக்கு தூக்கி ஆதீக் உர் ரஹ்மான் அரைசதம் அடித்தார். 41 பந்தில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் 19 ரன்கள் அடிக்க மதுரை பாந்தர்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் சேர்த்தது.

    Next Story
    ×