என் மலர்
கிரிக்கெட் (Cricket)

டிஎன்பிஎல் 2025: திண்டுக்கல் டிராகன்ஸ்க்கு 150 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது லைகா கோவை கிங்ஸ்
- பாலசுப்ரமணியன் சச்சின் 38 பந்தில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- அஸ்வின் 4 ஓவரில் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.
தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 2025 சீசனின் முதல் போட்டி கோவையில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ்- லைகா கோவை கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி லைகா கோவை கிங்ஸ் அணியின் விஷால் வைத்யா, சுரேஷ் லோகேஷ்வர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். விஷால் 6 ரன்னிலும், லோகேஷ்வர் 15 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த பாலசுப்ரமணியன் சச்சின் சிறப்பாக விளையாடினார். அவர் 38 பந்தில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆந்த்ரே சித்தார்த் 23 பந்தில் 25 ரன்களும், ஷாருக் கான் 14 பந்தில் 25 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியாக லைகா கோவை கிங்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் அஸ்வின் 4 ஓவரில் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும், ஜி. பெரியசாமி 30 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.






