என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கலைஞா் பல்கலைக்கழக விவகாரம்: தமிழக கவர்னர் வேண்மென்றே காலம் தாழ்த்துகிறார்- வைகோ
- விடுதலைப்புலிகளுக்காக சிறை சென்றவா் என் தம்பி ரவிச்சந்திரன்.
- பா.ஜ.க.வுடன் என்றும் கூட்டணி கிடையாது.
சுவாமிமலை:
கும்பகோணத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் மீத்தேன், மேகதாது விழிப்புணர்வு விளக்க பொதுக் கூட்டம் பழைய மீன் மார்க்கெட் அருகில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசியதாவது:-
ம.தி.மு.க.வில் வாரிசு அரசியல், குடும்ப அரசியல் என்று பேசுகின்றனா்.
மது ஒழிப்புக்காக போராடி உயிரைவிட்டவா் என் தாயாா் மாரியம்மாள். விடுதலைப்புலிகளுக்காக சிறை சென்றவா் என் தம்பி ரவிச்சந்திரன். இவா்களுக்கு என்ன பதவி கொடுத்தேன்.
பிரதமா் மோடி பதவி ஏற்பு விழாவுக்கு ராஜபக்சே வரக்கூடாது என்று கூறி பா.ஜ.க. கூட்டணியை விட்டு வெளியேறினோம்.
நாங்களா இப்போது பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்போம். பா.ஜ.க.வுடன் என்றும் கூட்டணி கிடையாது.
தமிழக நலன்களுக்கு முற்றிலும் எதிராக கவர்னர் ஆா்.என். ரவி நிற்கிறார். கும்பகோணத்தில் கலைஞா் பல்கலைக்கழகம் அமைப்பது தொடா்பான விவகாரத்தில் வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வருகிறார் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி.
எனவே இதை கண்டித்து, அவா் கொடுக்கும் சுதந்திர தின தேநீா் விருந்தை ம.தி.மு.க. புறக்கணிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.






