என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    கை குலுக்க மறுத்த விவகாரம்: PAKvsUAE போட்டி நடக்குமா? வெளியான புதிய தகவல்
    X

    கை குலுக்க மறுத்த விவகாரம்: PAKvsUAE போட்டி நடக்குமா? வெளியான புதிய தகவல்

    • கை குலுக்க மறுத்த விவகாரம் தொடர்பாக தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி விலகுவதாக தகவல் வெளியாகியது.
    • அதனால் பாகிஸ்தான் வீரர்கள் ஹோட்டலில் இருந்து மைதானத்திற்கு புறப்படவில்லை.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் (துபாய், அபுதாபி) நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான், UAE அணிகள் மோதுகிறது.

    இரண்டு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. இன்று இரு அணிகளும் தங்களது கடைசி லீக் போட்டியில் விளையாடுகின்றன. இதில் வெற்றிபெறும் அணி இந்தியாவுடன் சேர்ந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

    இந்நிலையில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியின் போது இரு அணி வீரர்களும் கை குலுக்கவில்லை. குறிப்பாக இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் அணி வீரர்களுடன் கை குலுக்கி கொள்ள முன் வரவில்லை.

    டாஸின் போது இந்திய கேப்டன் சூர்யகுமாருடன் கைக் குலுக்க வேண்டாம் என பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அகாவிடம் நடுவர் ஆண்டி பைகிராஃப்ட் கூறியதாக பாகிஸ்தான் ஐசிசி-யிடம் குற்றம் சாட்டியது. மேலும் அவர் இந்த தொடரில் இருந்து நீக்கவும் வலியுறுத்தியது.

    பாகிஸ்தானின் கோரிக்கைக்கு செவிசாய்த்து ஐசிசி ஒரு நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.

    இதனால் இந்த தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி விலகுவதாக தகவல் வெளியாகியது. அதனால் ஹோட்டலில் இருந்து மைதானத்திற்கு புறப்படவில்லை என்ற தகவலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் போட்டியில் விளையாடுவதற்காக மைதானத்திற்கு புறப்படுங்கள் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மோசின் நக்வி தெரிவித்துள்ளார்.

    இதனையடுத்து பாகிஸ்தான் வீரர்கள் ஹோட்டலில் இருந்து தாமதமாக புறப்பட்டு மைதானத்திற்கு புறப்பட்டுள்ளனர். இதனால் போட்டி ஒருமணி நேரம் தாமதமாக தொடங்கும் என தெரிய வந்துள்ளது.

    Next Story
    ×