என் மலர்
கிரிக்கெட் (Cricket)

சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதிக்குள் நுழைய மும்முனை போட்டி - வாய்ப்பு யாருக்கு?
- வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் வெளியேற்றி விட்டன.
- இங்கிலாந்து அணி தனது 2 போட்டிகளிலும் தோல்வியுற்றது.
எட்டு அணிகள் பங்கேற்றுள்ள சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் ஏ பிரிவில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஏற்கனவே அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிவிட்டன. வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் வெளியேற்றி விட்டன.
பி பிரிவில் இங்கிலாந்து அணி மட்டும் வெளியேறி உள்ளது. இந்த பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே அரைஇறுதி சுற்றுக்கான போட்டி நிலவுகிறது. இதில் இன்று நடைபெறும் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
கராச்சியில் நாளை நடக்கும் போட்டியில் தென் ஆப்பிரிக்கா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. பி பிரிவில் உள்ள அனைத்து அணிகளுக்கும் தலா ஒரு போட்டி எஞ்சி உள்ளன. தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா தலா 3 புள்ளிகளை பெற்றுள்ளன. ஆப்கானிஸ்தான் 2 புள்ளிகள் பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி தனது 2 போட்டிகளிலும் தோல்வியுற்றது.
இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தானை ஆஸ்திரேலியா தோற்கடித்தால் அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறும். அத்துடன் தென் ஆப்பிரிக்காவும் அரையிறுதிக்கு முன்னேறும்.
ஒருவேளை ஆஸ்திரேலியா தோற்றால், நாளைய போட்டியில் தென் ஆப்பிரிக்கா கட்டாயம் வெற்றி பெற வேண்டும். மேலும் மழையால் இன்றைய போட்டி கைவிடப்பட்டால் 4 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு முன்னேறும்.
ஆப்கானிஸ்தான் 3 புள்ளிகள் பெறும். அப்படி நடக்கும்பட்சத்தில் 3 புள்ளிகளுடன் இருக்கும் தென் ஆப்பிரிக்கா நாளைய போட்டியில் வெற்றி பெற வேண்டும். அதேவேளையில் தென் ஆப்பிரிக்கா அணியின் ரன்-ரேட் ஆப்கானிஸ்தானை விட நல்ல நிலையில் இருப்பதால் பெரிய அளவில் சிக்கல் இருக்காது என்றே தெரிகிறது.
இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால் அந்த அணி அரையிறுதிக்குள் நுழையும். அப்படி நடக்கும் பட்சத்தில் தென் ஆப்பிரிக்கா-இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டி முடிவுக்காக ஆஸ்திரேலியா காத்திருக்க வேண்டும்.
நாளைய போட்டியில் இங்கிலாந்து ஆறுதல் வெற்றி பெற முயற்சிக்கும் என்பதால் தென் ஆப்பி ரிக்காவுக்கு சவால் காத்து இருக்கிறது.






