என் மலர்tooltip icon

    விளையாட்டு

    மெஸ்ஸியை பார்க்க தேனிலவை ரத்து செய்த தம்பதி
    X

    மெஸ்ஸியை பார்க்க தேனிலவை ரத்து செய்த தம்பதி

    • கடந்த வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெற்றது.
    • நாங்கள் 2010-ம் ஆண்டு முதல் மெஸ்ஸியின் ஆட்டத்தை கவனித்து வருகிறோம்.

    உலகின் தலைச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான லியோனல் மெஸ்ஸி இன்று அதிகாலை இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். அர்ஜென்டினா அணியின் கேப்டனான அவர் 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு வந்துள்ளார். இதனால், கால்பந்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்து உள்ளனர்.

    அவர் கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் மெஸ்ஸி பங்கேற்றார். அவரை பார்ப்பதற்காக ஒரு தம்பதி தேனிலவை ரத்து செய்துள்ளது.

    இது தொடர்பாக மெஸ்ஸி ரசிகை கூறியதாவது:-

    கடந்த வெள்ளிக்கிழமை எங்களுக்கு திருமணம் நடைபெற்றது. மெஸ்ஸியை பார்ப்பதற்காக எங்களது தேனிலவு திட்டத்தை ரத்து செய்து விட்டோம். நாங்கள் 2010-ம் ஆண்டு முதல் மெஸ்சியின் ஆட்டத்தை கவனித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். அவரது கணவரும் இதே தகவலை தெரிவித்தார்.

    Next Story
    ×