என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
X
41 அணிகள் பங்கேற்பு... சென்னை மாவட்ட பள்ளிகள் கைப்பந்து நாளை தொடக்கம்
BySuresh K Jangir2 Sep 2022 11:02 AM GMT
- எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் 3 நாட்கள் போட்டி நடைபெறுகிறது.
- வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசு தொகையுடன் சான் அகாடமி கோப்பைகள் வழங்கப்படும்.
சென்னை:
சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் சான் அகாடமி ஆதரவுடன் மாவட்ட பள்ளிகள் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டி எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை (3-ந்தேதி) தொடங்குகிறது. 5-ந்தேதி வரை 3 நாட்கள் போட்டி நடைபெறுகிறது.
சிறுவர்கள் பிரிவில் 25 பள்ளிகளும், சிறுமிகள் பிரிவில் 16 பள்ளிகளும் ஆக மொத்தம் 41 அணிகள் பங்கேற்கின்றன. போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசு தொகையுடன் சான் அகாடமி கோப்பைகள் வழங்கப்படும். இது தவிர தனி நபர் பரிசு தொகையும் அளிக்கப்படும்.
மேற்கண்ட தகவல்களை சென்னை மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் ஆர்.அர்ஜுன் துரை தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X