search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா-ஜப்பான் நாளை அரைஇறுதியில் பலப்பரீட்சை
    X

    ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா-ஜப்பான் நாளை அரைஇறுதியில் பலப்பரீட்சை

    • நாளை மாலை 6 மணிக்கு நடைபெறும் முதல் அரை இறுதியில் மலேசியா-நடப்பு சாம்பியன் தென் கொரியா அணிகள் மோதுகின்றன.
    • ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி ஜப்பானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    சென்னை:

    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

    6 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் நேற்றுடன் லீக் ஆட்டங்கள் முடிவடைந்ததன. நேற்று நடந்த ஒரு போட்டியில் இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்த மோசமான தோல்வியால் பாகிஸ்தான் அரை இறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.

    லீக் முடிவில் இந்தியா 4 வெற்றி, 1 டிராவுடன் 13 புள்ளிகள் பெற்று முதல் இடத்தையும், மலேசியா 4 வெற்றி , 1 தோல்வியுடன் 12 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும் பிடித்ததன. இந்த இரு அணிகளும் ஏற்கெனவே அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிட்டன.

    தென் கொரியா, ஜப்பான், பாகிஸ்தான் ஆகிய 3 அணிகளும் 1 வெற்றி, 2 டிரா, 2 தோல்வியுடன் தலா 5 புள்ளிகள் பெற்றன. கோல்கள் அடிப்படையில் தென் கொரியா 3-வது இடத்தையும், ஜப்பான் 4-வது இடத்தையும் பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின. தென்கொரியாவின் கோல் வித்தியாசம்-1 ஆகவும், ஜப்பானின் கோல் வித்தியாசம்-2 ஆகவும் இருந்தது. பாகிஸ்தான் அணியின் கோல் வித்தியாசம்-5 ஆகும்.

    பாகிஸ்தான் 5-வது இடத்தை பிடித்து வாய்ப்பை இழந்தது. சீனா 1 டிரா, 4 தோல்வியுடன் 1 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தை பிடித்தது.

    இன்று ஓய்வு நாளாகும். அரைஇறுதி போட்டிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

    நாளை மாலை 6 மணிக்கு நடைபெறும் முதல் அரை இறுதியில் மலேசியா-நடப்பு சாம்பியன் தென் கொரியா அணிகள் மோதுகின்றன. மலேசிய அணி 'லீக்' ஆட்டத்தில் தென் கொரியாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி இருந்தது. இதனால் அந்த அணி நம்பிக்கையுடன் விளையாடும்.

    இரவு 8.30 மணிக்கு நடைபெறும் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா-ஜப்பான் அணிகள் மோதுகின்றன. ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி ஜப்பானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    இந்திய அணி இந்த தொடரில் எல்லா அணிகளையும் வீழ்த்தி இருந்தது. சீனாவை 7-2 என்ற கோல் கணக்கிலும், மலேசியாவை 5-0 என்ற கணக்கிலும், தென்கொரியாவை 3-2 என்ற கணக்கிலும், பாகிஸ் தான் 4-0 என்ற கணக்கி லும் வென்று இருந்தது. ஜப்பானுடன் 1-1 என்ற கணக்கில் 'டிரா' செய்து இருந்தது. இதனால் இந்திய அணி மிகவும் கவ னத்துடன் அரைஇறுதியில் விளையாட வேண்டும்.

    இந்த தொடரில் அதிக கோல்கள் அடித்த வீரராக இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் உள்ளார். அவர் 7 கோல்களை அடித்து உள்ளார். இந்த 7 கோல் களையும் அவர் பெனால்டி கார்னர் மூலமே அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளும் மோதிய 3 போட்டியில் இந்தியா 2-ல் வெற்றி பெற்றது. ஒரு ஆட்டம் 'டிரா' ஆனது.

    முன்னதாக மாலை 3.30 மணிக்கு நடைபெறும் 5-வது இடத்துக்கான போட்டியில் பாகிஸ்தான்-சீனா அணிகள் மோதுகின்றன.

    Next Story
    ×