search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வி அடைந்த ஆண்டி முர்ரே
    X

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வி அடைந்த ஆண்டி முர்ரே

    • ஆஸ்திரேலிய ஓபன் முதல் சுற்றில் முன்னணி வீரர் ஆண்டி முர்ர்ரே தோல்வி அடைந்தார்.
    • ஜோகோவிச், ரூப்லேவ், சின்னர் ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

    மெல்போர்ன்:

    டென்னிசில் ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் தொடங்கி 28-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    தொடக்க நாளில் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டங்களில் தரவரிசையில் நம்பர் 1 வீரரான ஜோகோவிச், ஆண்டி ரூபலேவ், சின்னர் ஆகியோர் வெற்றிபெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.

    இந்நிலையில், முன்னணி வீரரான இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே, அர்ஜெண்டினா வீரர் தாமஸ் மார்ட்டினுடன் மோதினார். இதில் தாமஸ் 6-4, 6-2, 6-2 என்ற நேர் செட்களில் வென்று முர்ரேவை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    Next Story
    ×