என் மலர்
விளையாட்டு

அலிஷா ஹீலி
மகளிர் உலகக்கோப்பை அரைஇறுதி: வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஆஸ்திரேலியா 305 ரன்கள் குவிப்பு
மகளிர் உலகக்கோப்பை அரைஇறுதி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா தொடக்க வீராங்கனை அலிஷா ஹீலி சதம் அடித்தார்.
வெலிங்டன்:
12-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதன் ‘லீக்‘ முடி வில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ் அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து அரை இறுதிக்கு தகுதி பெற்றன. இந்தியா, நியூசிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகள் முறையே 5 முதல் 8-வது இடங்களை பிடித்து வெளியேறின.
2 நாள் ஓய்வுக்கு பிறகு முதல் அரை இறுதி ஆட்டம் வெலிங்டனில் இன்று நடந்தது.
இதில் 7 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. மழையால் ஆட்டம் 45 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
‘டாஸ்’ வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 45 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 305 ரன் குவித்தது.
தொடக்க வீராங்கனை அலிஷா ஹீலி சதம் அடித்தார். 93-வது போட்டியில் விளையாடும் அவருக்கு இது 4-வது சதமாகும். அலிஷா ஹீலி 107 பந்தில் 129 ரன்னும் (17 பவுண்டரி, 1 சிக்சர்), மற்றொரு தொடக்க வீராங்கனை ராச்செல் கொய்னெஸ் 85 ரன்னும், மூனி 43 ரன்னும் எடுத்தனர்.
45 ஓவரில் 306 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது.
இதையும் படியுங்கள்...ஐபிஎல் தொடரின் பவர் பிளேயில் குறைந்த ரன்கள் எடுத்து ஐதராபாத் அணி மோசமான சாதனை
Next Story






