என் மலர்tooltip icon

    விளையாட்டு

    மாநில மகளிர் ஆக்கி போட்டி
    X
    மாநில மகளிர் ஆக்கி போட்டி

    சென்னையில் மாநில மகளிர் ஆக்கி போட்டி- 17 அணிகள் பங்கேற்பு

    சென்னையில் 2 நாட்கள் நடக்கவுள்ள மாநில மகளிர் ஆக்கி போட்டியில் 17 அணிகள் பங்கேற்கின்றனர்.
    சென்னை:

    முன்னாள் மாநில ஆக்கி வீராங்கனைகள் 15 பேர் இணைந்து “வி ஆர் பார் ஆக்கி கிளப்” என்ற அமைப்பை தொடங்கி உள்ளனர். இவர்கள் சர்வதேச மற்றும் தேசிய மாஸ்டர்ஸ் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை பெற்றுள்ளனர்.

    2019-ல் ஆஸ்திரேலியா, இத்தாலியில் நடந்த சர்வதேச போட்டிகளில் வெள்ளி, வெண்கலப்பதக்கமும், 2019-ல் உத்தரகாண்டில் நடந்த தேசிய மாஸ்டர்ஸ் போட்டியில் தங்கமும், 2020-ல் குஜராத்தில் நடந்த தேசிய போட்டியில் வெள்ளிப் பதக்கமும் பெற்றனர்.

    சர்வதேச மகளிர் தினத்தையொட்டி ‘வி ஆர் பார் ஆக்கி’ கிளப் சார்பில் மாநில அளவிலான மகளிர் ஆக்கி போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது.

    இந்தப் போட்டி மார்ச் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் போரூர் ராமச்சந்திராவில் உள்ள ஆக்கி மையத்தில் நடக்கிறது.

    இதில் எத்திராஜ், எம்.ஓ.பி கல்லூரிகள் உட்பட 17 அணிகள் பங்கேற்கின்றன. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை போட்டிகள் நடைபெறுகிறது. இந்த தகவலை ‘வி ஆர் பார் ஆக்கி’ கிளப் தலைவர் ரேகா தெரிவித்தார்.

    இந்த அமைப்பு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 9 பேர் பங்கேற்ற சென்னை மாவட்ட ஆக்கி போட்டியை நடத்தி இருந்தது. இதில் 9 அணிகள் பங்கேற்று இருந்தன. 

    Next Story
    ×