என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
X
சர்வதேச குத்துச்சண்டை: இந்திய வீராங்கனைகள் கால்இறுதிக்கு தகுதி
Byமாலை மலர்23 Feb 2022 4:08 AM GMT (Updated: 23 Feb 2022 4:08 AM GMT)
பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவில் தனது முதலாவது சுற்றில் இந்திய வீராங்கனை நித்து 5-0 என்ற கணக்கில் ரஷியாவின் சும்காலாகோவா இலியாவை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.
புதுடெல்லி:
73-வது ஸ்ட்ராண்ட்ஜா நினைவு சர்வதேச குத்துச்சண்டை போட்டி பல்கேரியாவில் உள்ள சோபியா நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவில் தனது முதலாவது சுற்றில் இந்திய வீராங்கனை நித்து 5-0 என்ற கணக்கில் ரஷியாவின் சும்காலாகோவா இலியாவை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.
இதேபோல் 50 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை அனாமிகா 4-1 என்ற கணக்கில் பல்கேரியாவின் சுகனோவா ஸ்லாடிஸ்லாவாவை வீழ்த்தி கால்இறுதியை எட்டினார். 54 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ஷிக்ஷா 0-5 என்ற கணக்கில் முன்னாள் உலக சாம்பியனான கஜகஸ்தானின் டினா ஜோல்மனிடம் வீழ்ந்தார்.
67 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் ஆகாஷ் 0-5 என்ற கணக்கில் ஜெர்மனியின் டேனியல் கிரோட்டரிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X