என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஸ்மித் சிக்சரை தடுக்க முயன்ற காட்சி
    X
    ஸ்மித் சிக்சரை தடுக்க முயன்ற காட்சி

    சிக்சரை தடுக்க முயன்ற ஸ்மித் - தொடரில் இருந்து விலகிய பரிதாபம்

    இலங்கை அணிக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் ஆஸ்திரேலியா அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.
    சிட்னி:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி 20 போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி சிட்னியில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து சூப்பர் ஓவரில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.

    இந்த போட்டியின் போது ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் அனைவரும் கவரும் வகையில் ஒரு முயற்சியில் ஈடுபட்டார். இலங்கை அணிக்கு கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை ஸ்டோனிஸ் வீசினார். அந்த ஓவரின் நான்காவது பந்தை இலங்கை வீரர் மகிஷ் தீக்ஷனா எல்லை கோட்டிற்கு அடித்தார். சிக்சர் என நினைத்த போது அங்கு வந்து ஸ்டீவ் ஸ்மித் அனைவரையும் மிரல வைக்கும் வகையில் அதை தடுத்தார். ஆனால் அவரது கால் பந்தை தடுப்பதற்கு முன்பே எல்லைக்கோட்டில் பட்டதால் அது சிக்சராக அறிவிக்கப்பட்டது. அந்த முயற்சியின் போதுதான் அவரின் தலையில் பலத்த காயமடைந்தது.  

    ஸ்டீவ் ஸ்மித்

    சிக்சரை தடுக்க முயன்ற போது ஏற்பட்ட காயம் காரணமாக 20 ஓவர் தொடரில் இருந்து ஸ்மித் விலகியுள்ளார். முன்னதாக இந்த போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் 15 பந்துகள் சந்தித்து 14 ரன்கள் மட்டுமே எடுத்தார்.


    Next Story
    ×