search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணி
    X
    இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணி

    ஜூனியர் உலக கோப்பையை 5வது முறை கைப்பற்றிய இந்திய அணிக்கு ரொக்கப் பரிசு

    ஒவ்வொரு வீரருக்கும் ரூ.40 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
    19 வயதுக்குட்பட்டோருக்கான  உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

    இது குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், ரூ.40 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இது சிறிய டோக்கன் முறையிலான பாராட்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    கங்குலி, ஜெய் ஷா

    இந்திய ஜூனியன் அணி ஐந்தாவது முறை சாம்பியன் பட்டம் வென்றவுடன் பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா, வீரர்கள் மற்றும் துணைப்பணியாளர்களுக்கு ரொக்க வெகுமதிகளை அறிவித்தார். 

    இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த அவர், முன்மாதிரியான செயல் திறனுக்காக ஒரு வீரருக்கு ரூ.40 லட்சமும், துணை ஊழியர்களுக்கு ரூ.25 லட்சமும் வெகுமதி அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள்இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×