என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
X
19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் - முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி
Byமாலை மலர்15 Jan 2022 10:18 PM GMT (Updated: 15 Jan 2022 10:18 PM GMT)
தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
கயானா:
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஐ.சி.சி. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்று உள்ளது. தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து, உகாண்டா ஆகிய நாடுகள் அந்த பிரிவில் இடம் பெற்று உள்ளன.
இந்திய அணி நேற்று தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது. கயானாவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 40 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியது.
முதலில் விளையாடிய இந்திய அணி, 46.5 ஓவர்கள் முடிவில் 232 ரன்கள் அடித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் யாஷ் துல் 82 ரன்கள் குவித்தார். மற்றொரு வீரர் கௌஷல் தம்பே 35 ரன்கள் அடித்தார்.
232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பின்னர் களம் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 45.4 ஓவர்கள் முடிவில் 187 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய பந்து வீச்சாளர் விக்கி ஓஸ்ட்வால் 5 விக்கெட்களையும், ராஜ்பாவா 4 விக்கெட்களையும் கைப்பற்றினர். இதையடுத்து 45 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X