search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா-நியூசிலாந்து அணி கேப்டன்கள்
    X
    இந்தியா-நியூசிலாந்து அணி கேப்டன்கள்

    நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டி- இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

    முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில், இன்று மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நடைபெறுகிறது.
    கொல்கத்தா:

    நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டி கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் இன்று நடக்கிறது.

    இதற்கான டாஸ்  சுண்டப்பட்டதில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வெற்றி பெற்று, பேட்டிங்கை தேர்வு செய்தார்.  துவக்க வீரர்களாக ரோகித் சர்மா, இஷான் கிஷன் களமிறங்கினர்.

    இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக உள்ளது. அஸ்வின், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல் உள்ளிட்ட பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் வீசி விக்கெட்களை வீழ்த்தி வருகின்றனர். எனவே, இந்த போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று டி20 தொடரை முழுமையாக கைப்பற்றும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.
    Next Story
    ×