என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மீண்டும் ஒருமுறை பந்து வீச்சில் அசத்தல்: பாகிஸ்தானுக்கு 135 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து
Byமாலை மலர்26 Oct 2021 4:08 PM GMT (Updated: 26 Oct 2021 4:08 PM GMT)
ஹாரிஸ் ரவுப் நான்கு விக்கெட்டுகள் சாய்க்க, ஷாஹீன் அப்ரிடி 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுக்க, நியூசிலாந்து அணியால் 134 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் ஷார்ஜாவில் நடைபெறும் ஆட்டத்தில் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுப் அட்டகாசமான பந்து வீச்சை வெளிப்படுத்தினர். இவர்களுக்கு சுழற்பந்து வீச்சாளர் சதாப் கான் கைக்கொடுக்க நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிக்க இயலவில்லை.
ஹாரிஸ் ரவுப் மார்ட்டின் கப்தில் (17), டேவன் கான்வே (27), க்ளென் பிளிப்ஸ் (13), டிம் செய்பெர்ட் (8), மிட்செல் சான்ட்னெர் (6) ஆகிய நான்கு பேரையும் வீழ்த்த நியூசிலாந்து அணியால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X