search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கை அணி
    X
    இலங்கை அணி

    20 ஓவர் உலக கோப்பை: 2-வது வெற்றி ஆர்வத்தில் இலங்கை- அயர்லாந்து பலப்பரீட்சை

    2-வது வெற்றியை பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் இலங்கை- அயர்லாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.
    7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமனில் நடைபெற்று வருகிறது. 8 நாடுகள் பங்கேற்றுள்ள முதல் சுற்று ஆட்டங்களில் இதுவரை 6 போட்டிகள் முடிந்துள்ளன.

    ‘ ஏ’ பிரிவில் இலங்கை, அயர்லாந்து அணிகள் தலா ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகள் பெற்று உள்ளன. நமீபியா, நெதர்லாந்து ஆகிய அணிகள் தலா ஒரு தோல்வியுடன் புள்ளி எதுவும் பெறவில்லை. ‘பி’ பிரிவில் ஸ்காட்லந்து 4 புள்ளியுடனும் , வங்காளதேசம், ஓமன் தலா 2 புள்ளியுடனும் உள்ளன. பப்புவா நியூ கினியா புள்ளி எதுவும் பெறவில்லை.

    லீக் முடிவில் 2 பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் 2-வது ரவுண்டான சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும்.

    4-வது நாளான இன்று இரண்டு ஆட்டங்களும் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள அபுதாபியில் நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஏ பிரிவில் உள்ள நமீபியா- நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் முதல் வெற்றிக்காக காத்திருக்கின்றன.

    இரவு 7.30 மணிக்கு இதே பிரிவில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் இலங்கை- அயர்லாந்து அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளுமே 2-வது வெற்றியை பெற்று சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும் ஆர்வத்தில் உள்ளன. முன்னாள் சாம்பியனான இலங்கை தொடக்க ஆட்டத்தில் நமீபியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து இருந்தது. பலம் வாய்ந்த அந்த அணி அயர்லாந்தை வீழ்த்தும் வேட்கையில் இருக்கிறது.

    அயர்லாந்து

    அயர்லாந்து முதல் ஆட்டத்தில் நெதர்லாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது.

    விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நேரடியாக 2-வது சுற்றில் விளையாடுகிறது. இந்தியா முதல் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×