என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போட்டி தொடங்குவதற்கு சற்றுமுன் பாகிஸ்தான் தொடரை ரத்து செய்தது நியூசிலாந்து
Byமாலை மலர்17 Sep 2021 11:41 AM GMT (Updated: 17 Sep 2021 1:49 PM GMT)
நியூசிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிராக இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருந்த நிலையில், தொடரை ரத்து செய்துள்ளது.
நியூசிலாந்து அணி நீண்ட காலத்திற்குப் பிறகு பாகிஸ்தான் சென்று மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட முடிவு செய்தது.
அதன்படி நியூசிலாந்து வீரர்கள் வங்காளதேசம் தொடரை முடித்துக் கொண்டு பாகிஸ்தான் சென்றனர். பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வந்தனர். இன்று மதியம் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடங்க இருந்தது.
இந்த நிலையில் போட்டி தொடங்குவதற்கு சற்றுமுன் பாதுகாப்பு எச்சரிக்கை காரணமாக நியூசிலாந்து அணி பாகிஸ்தானை தொடரில் விளையாட முடியாது என அறிவித்தது. இதனால் தொடரை கைவிடப்பட்டுள்ளது.
நியூசிலாந்து அரசாங்கத்தின் பாதுகாப்பு எச்சரிக்கையை முன்னிட்டு, வீரர்களின் நலன்தான் முக்கியம் என்ற அடிப்படையில் நியூசிலாந்து கிரிக்கெட் போர்டு இந்த முடிவு எடுத்துள்ளது.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் ராவல் பிண்டியிலும், டி20 கிரிக்கெட் தொடர் லாகூரிலும் நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X