என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐ.பி.எல். தொடரில் டெல்லி அணியின் கேப்டன் யார்?: புதிருக்கு விடையளித்தார் அணி நிர்வாகி
Byமாலை மலர்31 Aug 2021 2:45 PM GMT (Updated: 31 Aug 2021 2:45 PM GMT)
ஷ்ரேயாஸ் அய்யர் மற்றும் ரிஷாப் பண்ட் ஆகியோரில் யார் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுவார் என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 14-வது சீசன் ஐ.பி.எல். தொடர் தொடங்கப்பட்டது. மொத்தம் 60 போட்டிகளில் 29 போட்டிகள் விளையாடி முடிக்கப்பட்ட நிலையில், கொரோனா பரவல் காரணமாக ஐ.பி.எல். தொடர் நிறுத்தப்பட்டது. தற்போது மீதமுள்ள 31 போட்டிகள் வரும் செப்டம்பர் 19-ம்தேதி முதல் அக்டோபர் 15-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளன.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் காயமடைந்தார். இதனால், ஐ.பி.எல். தொடரில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது. அவருக்கு பதிலாக இளம் வீரரான ரிஷாப் பண்ட் டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்கபபட்டார். டெல்லி அணியை சிறப்பாக வழி நடத்தி எட்டு போட்டிகளில் ஆறு வெற்றிகளை பெற்றுக் கொடுத்ததுடன் ரிஷாப் பண்ட் தனிப்பட்ட முறையிலும் சிறப்பாக விளையாடினார்.
இதையடுத்து, காயமடைந்த ஷ்ரேயாஸ் ஐயர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து ஐ.பி.எல். போட்டியில் விளையாட தயாராகிவிட்டார். இதனால் டெல்லி அணியை யார் வழி நடத்தப்போவது என்று ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில், ரிஷாப் பண்ட்தான் கேப்டனாக தொடர்வார் என்று டெல்லி அணியின் நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. ஆனால், கண்டிப்பாக ரிஷாப் பண்ட் கேப்டனாக செயல்படுவார் என்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X