என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒருநாள் போட்டியில் 4 ரன் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகள் சாய்த்த இந்திய கிரிக்கெட் வீரர் ஓய்வு
Byமாலை மலர்30 Aug 2021 11:08 AM GMT (Updated: 30 Aug 2021 11:08 AM GMT)
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னி கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் பின்னி அறிக்கை ஒன்றை வெளியிடுள்ளார். அந்த அறிக்கையில் ‘நான் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுப்பெறுகிறேன். இந்தியாவுக்காக சர்வதேசப் போட்டிகளில் விளையாடியது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. தற்போது நான் ஓய்வுபெறும் நேரம் வந்துவிட்டது’ என தெரிவித்துள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். இவர் இந்திய அணிக்காக 6 டெஸ்ட் போட்டிகளிலும், 14 ஒருநாள் போட்டிகளிலும், மூன்று 20 ஓவர் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
2015-ம் ஆண்டுக்குப்பின் இந்திய அணியில் ஸ்டூவர்ட் பின்னியால் இடம் பிடிக்க முடியவில்லை. இவர் வங்காளதேசம் அணிக்கு எதிராக டாக்காவில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் 4 ரன்களை மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X