என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐ.பி.எல். 2021 தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகல்
Byமாலை மலர்30 Aug 2021 10:44 AM GMT (Updated: 30 Aug 2021 12:02 PM GMT)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக விளையாடி வந்த வாஷிங்டன் சுந்தர் ஐ.பி.எல். 2021 சீசன் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
செப்டம்பர் 19-ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல். 2021 தொடரின் எஞ்சிய போட்டிகள் நடைபெற உள்ளது. துபாயில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த நிலையில் ஆர்.சி.பி. அணியின் சுழற்பந்து வீச்சாளரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான வாஷிங்டன் சுந்தர் கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகியுள்ளார்.
முன்னதாக, தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் இந்தியாவில் நடைபெற்ற ஐ.பி.எல். 2021 தொடரில் ஆறு ஆட்டங்களில் விளையாடி மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
கடந்த 2018-ல் ஆர்.சி.பி. அணியில் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர், இதுவரை 32 ஆட்டங்களில் விளையாடி 19 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
ஆர்.சி.பி. அணியில் சுந்தருக்கு பதிலாக பெங்கால் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்-ஐ எடுத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆர்.சி.பி. மேலும் ஐந்து வீரர்களையும் தேர்வு செய்துள்ளது.
இதையும் படியுங்கள்: 4-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X