என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிதி அசோக்
    X
    அதிதி அசோக்

    இந்திய மக்கள் 4 மணிக்கு எழுந்து போட்டியை பார்ப்பார்கள் என எதிர்பார்க்கவில்லை: கோல்ஃப் வீராங்கனை நெகிழ்ச்சி

    டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய வீராங்கனை அதிதி அசோக் ஒரு புள்ளி வித்தியாசத்தில் பதக்கத்திற்கான வாய்ப்பை இழந்தாலும், இந்திய மக்களின் மனதில் இடம் பிடித்தார்.
    டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 120 வீரர்- வீராங்கனைகள் கலந்து கொண்டனர். ஆண்கள் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது. அதுபோக ஒரு தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கம் வென்றது இந்தியா. பெரும்பாலான வீரர்- வீராங்கனைகள் பதக்கத்தை வெல்ல முடியவில்லை என்றாலும், தங்களது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினர்.

    அப்படி வெளிப்படுத்தியவர்களில் ஒருவர் கோல்ஃப் வீராங்கனை அதிதி அசோக். கோல்ஃப் போட்டி நான்கு சுற்றுகளாக நடைபெற்றது. முதல் மூன்று சுற்றுகள் முடிவில் இந்திய வீராங்கனை அதிதி அசோக் 2-வது இடத்தில் இருந்தார். இதனால் எப்படியும் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், 4-வது சுற்றில் சற்று பின்தங்கினார். இதனால் ஒரு புள்ளி வித்தியாசத்தில் பதக்கத்துக்கான வாய்ப்பை இழந்தார். கோல்ஃப் போட்டி காலை 4 மணிக்கு தொடங்கியது. என்றாலும் இந்திய மக்கள் டி.வி.யை ஆன் செய்து போட்டியை பார்த்து ரசித்தனர்.

    இதை அதிதி சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதுகுறித்து அதிதி அசோக் கூறுகையில் ‘‘இந்தியாவின் பெரும்பாலான மக்கள் காலையிலேயே எழுந்து, கோல்ஃப் போட்டியை பார்ப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இது சிறந்த உணர்வு. ஒலிம்பிக்ஸ் கோல்ஃப் போட்டிக்கு ஏராளமான ரசிகர்களை கொண்டு வந்துள்ளது’’ என்றார்.
    Next Story
    ×