என் மலர்
செய்திகள்

டிஎன்பிஎல் கிரிக்கெட்
டி.என்.பி.எல்.: நெல்லை அணிக்கு எதிராக கோவை கிங்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு
வெற்றி பெற்றால்தான் பிளே-ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற வாழ்வா? சாவா? போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு எதிராக கோவை கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 தொடரின் லீக் ஆட்ட போட்டிகள் கடைசி கட்டத்தை எட்டியுள்ளன. இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அத்துடன் லீக் போட்டிகள் முடிவடைந்துவிடும்.
மதியம் 3.30 மணிக்கு தொடங்கிய முதல் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ்- நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் கோவை கிங்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இரண்டு அணிகளும் தலா ஆறு போட்டிகளில் விளையாடியுள்ளன. நெல்லை ராயல் கிங்ஸ் 3 வெற்றியும், லைகா கோவை கிங்ஸ் 2 வெற்றிகளும் பெற்றுள்ளன.
நெல்லை ராயல் கிங்ஸ் வெற்றி பெற்றால் பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு முன்னேறும். லைகா கோவை கிங்ஸ் அணி வெற்றி பெற்றால் 3 வெற்றிகள் பெறும். இரு அணிகளும் தலா 3 வெற்றி, ஒரு போட்டி முடிவில்லை என்பதன் மூலமாக ஏழு புள்ளிகளுடன் ஒரே இடத்தை பிடிக்கும். அப்போது ரன் ரேட் கணக்கிடப்பட்டு இரண்டில் ஒரு அணி பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறும்.
Next Story






