என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
4வது டி20 போட்டி - ஆறுதல் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா
Byமாலை மலர்7 Aug 2021 11:19 PM GMT (Updated: 8 Aug 2021 12:13 AM GMT)
வங்காளதேசத்திற்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஸ்வெப்சன் 4 ஓவர் வீசி 12 ரன் விட்டுக் கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார்.
டாக்கா:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் 3 போட்டிகளில் வங்காளதேசம் அணி வென்று தொடரையும் கைப்பற்றியது.
இந்நிலையில், 4-வது 20 வது ஓவர் போட்டி டாக்காவில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த வங்காளதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக நயீம் 28 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, 105 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை துவக்கிய ஆஸ்திரேலிய அணி 19 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி20 போட்டி வரும் 9-ம் தேதி நடைபெற உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X