search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர்கள்
    X
    விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர்கள்

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு 125 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது மதுரை பாந்தர்ஸ்

    மதுரை பாந்தர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் மணிமாறன் சித்தார்த் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    சென்னை:

    டிஎன்பில் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

    அதன்படி, மதுரை பாந்தர்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிரவீன் தான் சந்தித்த 2பந்தை பவுண்டரிக்கும் 3-வது பந்தை சிக்சருக்கும் பறக்க விட்ட அவர் அடுத்த பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார். இதை தொடர்ந்து அடுத்தடுத்து விக்கெட்கள் சரிய தொடங்கியது. 85 ரன்கள் எடுப்பதற்குள் அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்தது தடுமாறியது.

    இதனையடுத்து மதுரை அணியின் கேப்டன் பொறுப்புடன் ஆடி அரை சதம் அடித்தார். கடைசி வரை போராடிய அவர் 70 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். 20 ஓவர் முடிவில் மதுரை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்தது. 

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் மணிமாறன் சித்தார்த் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 
    Next Story
    ×