search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மல்யுத்த போட்டியில் ரவிக்குமார் தாஹியா
    X
    மல்யுத்த போட்டியில் ரவிக்குமார் தாஹியா

    ஒலிம்பிக் மல்யுத்தம்- இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்தார் ரவிக்குமார்

    ஒலிம்பிக் போட்டியில் பி.வி.சிந்து, மீராபாய் சானு, லாவ்லினாவை தொடர்ந்து இந்தியாவுக்கு நான்காவது பதக்கத்தை உறுதி செய்துள்ளார் ரவிக்குமார் தாஹியா.
    32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன.

    இன்று நடைபெற்ற மல்யுத்தம் 57 கிலோ எடைப்பிரிவு அரையிறுதி போட்டியில் கஜகஸ்தான் வீரரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளார் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா.

    ரவிக்குமார் தாஹியா

    அரையிறுதியில் வென்றதன் மூலம் இந்திய வீரர் ரவிக்குமாருக்கு பதக்கம் உறுதியாகியுள்ளது.

    ஏற்கனவே பேட்மிண்டனில் பி.வி.சிந்து வெண்கலமும், பளு தூக்குதலில் மீராபாய் சானு வெள்ளியும், மகளிருக்கான குத்துச்சண்டையில்  லாவ்லினா வெண்கல பதக்கமும் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×