என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டிஎன்பிஎல் கிரிக்கெட் - 5 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல்லை வீழ்த்தியது நெல்லை
Byமாலை மலர்3 Aug 2021 5:36 PM GMT (Updated: 3 Aug 2021 5:36 PM GMT)
திண்டுக்கல் அணிக்கு எதிராக ஆடிய நெல்லை அணியின் சஞ்சய் யாதவ் அதிரடியாக ஆடி 15 பந்துகளில் 3 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 31 ரன்கள் எடுத்தார்.
சென்னை:
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 21வது ஆட்டம் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற நெல்லை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த திண்டுக்கல் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் சேர்த்தது.
ராஜாமணி சீனிவாசன் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 60 ரன்னில் அவுட்டானார். விவேக் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
நெல்லை சார்பில் அதிசயராஜ் 2 விக்கெட்டும், ஹரிஷ், திரிலோக் நாக், சஞ்சய் யாதவ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர் பாபா அபராஜித் சிறப்பான தொடக்கம் கொடுத்தார். அவர் 44 ரன்னில் ஆட்டமிழந்தார். சஞ்சய் யாதவ் 32 ரன்கள் சேர்த்தார்.
இறுதியில், நெல்லை அணி 5 விக்கெட் இழப்புக்கு வெற்றிக்கு தேவையான ரன்களை எடுத்தது. நெல்லை அணி பெற்ற இரண்டாவது வெற்றி இதுவாகும்.
திண்டுக்கல் அணி சார்பில் ரங்கராஜ் சுதீஷ், விக்னேஷ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X