என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
184 ரன்கள் குவித்து திருப்பூர் அணியை திணறடித்த மதுரை பாந்தர்ஸ்
Byமாலை மலர்2 Aug 2021 3:56 PM GMT (Updated: 2 Aug 2021 3:56 PM GMT)
டிஎன்பிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
சென்னை:
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 20வது ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் மதுரை பாந்தர்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த மதுரை அணியின் பேட்ஸ்மேன்கள் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். துவக்க வீரர் சுகேந்திரன் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் பிரவீன் குமார்-அனிருத் சீதா ராம் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பிரவீன் குமார் 35 ரன்களும், அனிருத் 33 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இருவரும் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டை இழந்தனர். அப்போது அணியின் ஸ்கோர் 89 ரன்கள்.
அதன்பின்னர், அதிரடியாக ஆடிய ஜெகதீசன் கவுசிக் 40 ரன்களும், சதுர்வேத் 41 ரன்களும் (நாட் அவுட்), அருண் கார்த்திக் 11 ரன்களும் (நாட் அவுட்) எடுக்க, மதுரை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது. திருப்பூர் தரப்பில் முகமது 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்கியது.
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 20வது ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் மதுரை பாந்தர்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த மதுரை அணியின் பேட்ஸ்மேன்கள் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். துவக்க வீரர் சுகேந்திரன் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் பிரவீன் குமார்-அனிருத் சீதா ராம் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பிரவீன் குமார் 35 ரன்களும், அனிருத் 33 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இருவரும் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டை இழந்தனர். அப்போது அணியின் ஸ்கோர் 89 ரன்கள்.
அதன்பின்னர், அதிரடியாக ஆடிய ஜெகதீசன் கவுசிக் 40 ரன்களும், சதுர்வேத் 41 ரன்களும் (நாட் அவுட்), அருண் கார்த்திக் 11 ரன்களும் (நாட் அவுட்) எடுக்க, மதுரை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது. திருப்பூர் தரப்பில் முகமது 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்கியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X