என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பளுதூக்குதல், துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் தங்கம் வென்றது சீனா
Byமாலை மலர்2 Aug 2021 10:35 AM GMT (Updated: 2 Aug 2021 10:35 AM GMT)
டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச்சுடுதல், பளுதூக்குதல் போட்டிகளில் சீனா தங்கம் வென்றது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 50மீ ரைபிள் 3 பொசிசன்ஸ் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் சீனா தங்கம் வென்றது. சீனாவின் சாங்ஹோங் ஷாங் 466 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். மேலும் 466 புள்ளிகளுடன் ஒலிம்பிக் மற்றும் உலக சாதனைப் படைத்து அசத்தினார். ரஷ்யா வீரர் செர்கே காமென்ஸ்கி 464.2 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். செர்பிய வீரர் மிலென்கோ செபிக் 448.2 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார்.
பெண்களுக்கான 87 கிலோ எடைப்பிரிவு குரூப் ‘ஏ’ பளுதூக்குதல் போட்டியில் சீன வீராங்கனை வாங் ஸ்னாட்ச் முறையில் 120 கிலோ, க்ளீன் அண்டு ஜெர்க் முறையில் 150 கிலோ என மொத்தம் 270 கிலோ எடையை தூக்கி தங்கப்பதக்கம் வென்றார்.
ஈகுவடார் வீராங்கனை யஜைரா தமரா 113+150 என 263 கிலோ எடையை தூக்கி வெள்ளிப்பதக்கம் வென்றார். டொமினிக்கன் ரிபப்ளிக் வீராங்கனை சான்டனா 116+140 என 256 கிலோ எடையை தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X