search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    4 விக்கெட் வீழ்த்திய சாய் கிஷோர்
    X
    4 விக்கெட் வீழ்த்திய சாய் கிஷோர்

    சாய் கிஷோர் அபார பந்துவீச்சு - திண்டுக்கல்லை வீழ்த்தியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

    திண்டுக்கல் அணிக்கு எதிரான போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீசின் ஜெகதீசன், கவுசிக் காந்தி ஜோடி முதல் விக்கெட்டுக்கு 73 ரன்கள் சேர்த்தது.
    சென்னை:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
     
    முதலில் பேட் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் குவித்தது.

    தொடக்க வீரர்கள் இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கவுசிக் காந்தி 45 ரன்னும், ஜெகதீசன் 40 ரன்னும் எடுத்தனர்.

    அதிரடி காட்டிய கவுசிக் காந்தி

    திண்டுக்கல் சார்பில் சிலம்பரசன் 2 விக்கெட், ரங்கராஜ் சுதேஷ், விக்னேஷ், ஹரிஹரன் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஹரி நிஷாந்த் 39 ரன்னில் அவுட்டானார். ராஜாமணி சீனிவாசன் 24 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், திண்டுக்கல் அணி 8 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள்மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சேப்பாக் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இது சேப்பாக் அணி பெற்ற 2வது வெற்றி ஆகும். 

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சார்பில் சாய் கிஷோர் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். 
    Next Story
    ×