என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டிஎன்பிஎல் கிரிக்கெட்: திருப்பூர் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி
Byமாலை மலர்31 July 2021 1:53 PM GMT (Updated: 31 July 2021 2:31 PM GMT)
டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 ரன்கள் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணி வெற்றி பெற்றது.
சென்னை:
5-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த முதல் ஆட்டத்தில் கோவை கிங்ஸ்- திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கோவை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. அதிக பட்சமாக தினேஷ் 39 ரன்கள் விளாசினார். கோவை அணி தரப்பில் அபிலேஷ், முகிலேஷ், திவாகர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவை அணி களமிறங்கியது. கங்கா ஸ்ரீதர் 30, வெங்கட்ரமணன் 24, சாய் சுதர்சன் 51 ரன்கள் எடுத்தனர். கடைசி கட்டத்தில் 6 பந்துகளுக்கு 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் திருப்பூர் அணியின் கேப்டன் முகமது சிறப்பாக பந்து வீசி 3 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்தார். இதனால் அந்த அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X