search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீன வீராங்கனையிடம் குத்து வாங்கிய பூஜா ராணி
    X
    சீன வீராங்கனையிடம் குத்து வாங்கிய பூஜா ராணி

    பெண்களுக்கான மிடில் வெயிட் குத்துச்சண்டை: இந்திய வீராங்கனை பூஜா ராணி காலிறுதியோடு வெளியேற்றம்

    சீன வீராங்கனையின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஐந்து நடுவர்களின் புள்ளிகளையும் இழந்து பரிதாபமாக ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறினார்.
    குத்துச்சண்டையில் பெண்களுக்கான மிடில் வெயிட் (69-75 கிமீ) பிரிவில் இன்று காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. 4-வது காலிறுதியில் இந்தியாவின் பூஜா ராணி சீனாவின் கியன் லீயை எதிர்கொண்டார். 

    சீன வீராங்கனையின் தாக்குலுக்கு இந்திய வீராங்கனை பூஜா ராணியால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் மூன்று சுற்றுகளிலும் ஐந்து நடுவர்களிடம் இருந்து ஒருமுறை கூட அதிக மதிப்பெண்கள் பெற முடியவில்லை.

    இதனால் 27-30, 26-30, 27-30, 27-30, 27-30 என 0:5 என்ற கணக்கில் தோல்வியடைந்த வெளியேறினார்.
    Next Story
    ×