என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டோக்கியோ ஒலிம்பிக்: ஜப்பானை வீழ்த்தி இந்திய ஆண்கள் ஆக்கி அணி வெற்றி
Byமாலை மலர்30 July 2021 11:26 AM GMT (Updated: 30 July 2021 11:26 AM GMT)
டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஆக்கி லீக் சுற்று போட்டியில் ஜப்பானை 5-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது.
டோக்கியோ:
டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று ஆண்கள் ஆக்கி லீக் சுற்றுகள் நடைபெற்றது. லீக் சுற்றின் 27-வது போட்டியில் ஜப்பான் அணியை இந்திய அணி எதிர்கொண்டது. போட்டி தொடங்கிய 13-வது நிமிடத்தில் இந்திய வீரர் ஹர்மன்பிரீத் சிங் முதல் கோல் அடித்தார். தொடர்ந்து ஆட்டத்தின் 2-வது கால் பகுதியில் 17-வது நிமிடத்தில் இந்திய வீரர் குர்ஜந்த் சிங் ஒரு கோல் அடித்தார்.
இதனால், இந்திய அணியின் கோல் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்தது.
தொடர்ந்து ஆட்டத்தின் 2-வது கால் பகுதியில் 19-வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் டனகா கோல் அடித்து தனது நாட்டு அணிக்கு கோல் கணக்கை தொடங்கி வைத்தார். ஆட்டத்தின் 3-வது கால் பகுதியில் 33-வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் ஹுடனபி ஒரு கோல் அடித்தார். இதனால், ஜப்பான் அணியின் கோல் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்தது. இரு அணிகளும் தலா இரண்டு
கோல்கள் என சமநிலையில் இருந்தன. இதனால், ஆட்டம் சூடுபிடித்தது. இதனை தொடர்ந்து இந்திய ஆண்கள் அணியினர் சிறப்பாக செயல்பட்டு அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்தனர்.
ஆட்டத்தின் 34-வது நிமிடத்தில் ஷம்ஷர் சிங்கும், 51-வது நிமிடத்தில் நீலகண்ட ஷர்மாவும் தலா 1 கோல் அடித்தனர். பெனால்டி கார்னர் முறை மூலம் இந்தியா மேலும் ஒரு கோல் அடித்தது. இதனால், இந்திய அணியில் கோல் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்தது. ஆட்டத்தின் 59-வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் முராடா ஒரு கோல் அடித்தார். இதனால், அந்த அணியின் கோல் எண்ணிக்கை
3 ஆக அதிகரித்தது. இறுதியில் ஜப்பானை 5-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று ஆண்கள் ஆக்கி லீக் சுற்றுகள் நடைபெற்றது. லீக் சுற்றின் 27-வது போட்டியில் ஜப்பான் அணியை இந்திய அணி எதிர்கொண்டது. போட்டி தொடங்கிய 13-வது நிமிடத்தில் இந்திய வீரர் ஹர்மன்பிரீத் சிங் முதல் கோல் அடித்தார். தொடர்ந்து ஆட்டத்தின் 2-வது கால் பகுதியில் 17-வது நிமிடத்தில் இந்திய வீரர் குர்ஜந்த் சிங் ஒரு கோல் அடித்தார்.
இதனால், இந்திய அணியின் கோல் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்தது.
தொடர்ந்து ஆட்டத்தின் 2-வது கால் பகுதியில் 19-வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் டனகா கோல் அடித்து தனது நாட்டு அணிக்கு கோல் கணக்கை தொடங்கி வைத்தார். ஆட்டத்தின் 3-வது கால் பகுதியில் 33-வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் ஹுடனபி ஒரு கோல் அடித்தார். இதனால், ஜப்பான் அணியின் கோல் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்தது. இரு அணிகளும் தலா இரண்டு
கோல்கள் என சமநிலையில் இருந்தன. இதனால், ஆட்டம் சூடுபிடித்தது. இதனை தொடர்ந்து இந்திய ஆண்கள் அணியினர் சிறப்பாக செயல்பட்டு அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்தனர்.
ஆட்டத்தின் 34-வது நிமிடத்தில் ஷம்ஷர் சிங்கும், 51-வது நிமிடத்தில் நீலகண்ட ஷர்மாவும் தலா 1 கோல் அடித்தனர். பெனால்டி கார்னர் முறை மூலம் இந்தியா மேலும் ஒரு கோல் அடித்தது. இதனால், இந்திய அணியில் கோல் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்தது. ஆட்டத்தின் 59-வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் முராடா ஒரு கோல் அடித்தார். இதனால், அந்த அணியின் கோல் எண்ணிக்கை
3 ஆக அதிகரித்தது. இறுதியில் ஜப்பானை 5-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X