என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
டிஎன்பிஎல் கிரிக்கெட்: திருச்சி அணிக்கு 3-வது வெற்றி கிடைக்குமா?
சென்னை:
8 அணிகள் பங்கேற்றுள்ள 5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த 10-வது லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்சை தோற்கடித்தது.
இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 11-வது லீக் ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.
திருச்சி வாரியர்ஸ் 3 ஆட்டத்தில் 2 வெற்றி, 1 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. அந்த அணி நெல்லை ராயல்சை 74 ரன்னிலும், மதுரை பாந்தர்சை 3 விக்கெட்டிலும் வென்றது. கோவையிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.
திண்டுக்கலை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் திருச்சி அணி உள்ளது.
திண்டுக்கல் டிராகன்ஸ் 1 வெற்றி, 1 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று உள்ளது. அந்த அணி மதுரையிடம் 6 விக்கெட்டில் தோற்றது. கோவையை 5 விக்கெட்டில் வீழ்த்தியது.
திருச்சியை தோற்கடித்து 2-வது வெற்றியை பெறும் வேட்கையில் திண்டுக்கல் அணி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்