search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    டிஎன்பிஎல் கிரிக்கெட்: திருச்சி அணிக்கு 3-வது வெற்றி கிடைக்குமா?

    திருச்சி வாரியர்ஸ் 3 ஆட்டத்தில் 2 வெற்றி, 1 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. அந்த அணி நெல்லை ராயல்சை 74 ரன்னிலும், மதுரை பாந்தர்சை 3 விக்கெட்டிலும் வென்றது. கோவையிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

    சென்னை:

    8 அணிகள் பங்கேற்றுள்ள 5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த 10-வது லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்சை தோற்கடித்தது.

    இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 11-வது லீக் ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    திருச்சி வாரியர்ஸ் 3 ஆட்டத்தில் 2 வெற்றி, 1 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. அந்த அணி நெல்லை ராயல்சை 74 ரன்னிலும், மதுரை பாந்தர்சை 3 விக்கெட்டிலும் வென்றது. கோவையிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

    திண்டுக்கலை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் திருச்சி அணி உள்ளது.

    திண்டுக்கல் டிராகன்ஸ் 1 வெற்றி, 1 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று உள்ளது. அந்த அணி மதுரையிடம் 6 விக்கெட்டில் தோற்றது. கோவையை 5 விக்கெட்டில் வீழ்த்தியது.

    திருச்சியை தோற்கடித்து 2-வது வெற்றியை பெறும் வேட்கையில் திண்டுக்கல் அணி உள்ளது.

    Next Story
    ×