search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரை சதமடித்த மான் பாப்னா
    X
    அரை சதமடித்த மான் பாப்னா

    டிஎன்பிஎல் கிரிக்கெட் - மான் பாப்னா அதிரடியில் நெல்லையை வென்றது திருப்பூர்

    டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் திருப்பூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நெல்லை அணியின் பாபா அபராஜித் சிறப்பாக பந்து வீசி 1.5 ஓவரில் 9 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.
    சென்னை:

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட்டில் இன்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    முதலில் பேட் செய்த நெல்லை அணி 19.5 ஓவரில் 148 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரர் சூர்யபிரகாஷ் 43 ரன்னும், அர்ஜுன் மூர்த்தி 35 ரன்னும் எடுத்தனர்.

    திருப்பூர் அணி சார்பில் ராஜ்குமார், மொகமது தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சித்தார்த் 28 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    3 விக்கெட் வீழ்த்திய பாபா அபராஜித்

    மான் பாப்னா பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். முதலில் நிதானமாக ஆடிய மான் பாப்னா கடைசியில் அதிரடியில் மிரட்டினார். 

    இறுதியில், திருப்பூர் அணி 7 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. மான் பாப்னா 51 பந்துகளில் 3 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
    Next Story
    ×